🛕 ஆலய வழிபாடு
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" – ஒளவைப்பாட்டியின் கூற்று.
இறைவனை அடைவதற்குப் பல்வேறு வழிகள் உண்டு. அவற்றில் ஆலய வழிபாடும் ஒன்று. ஆலயம் என்பது ஆன்மாக்கள் ஒடுங்குவதற்கு ஏற்ற புனிதமான இடமாகும். கோவில் என்பது "இறைவன் உறையும் இடம்" எனப் பொருள் தருகிறது.
ஞானிகள் தமக்குள் இறைவனை காண்பர். சாதாரண மனிதர்களுக்கு ஆலய வழிபாடு இன்றியமையாதது. எனவே அங்கு செல்வோர் உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
🚶 ஆலயத்திற்கு செல்லும் முறைகள்
ஆலயத்திற்கு செல்லும் போது நீராடி, தூய ஆடைகளை அணிந்து, சிவசின்னங்களைத் தரித்து "நமசிவாய" மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு செல்ல வேண்டும்.
தினமும் செல்ல இயலாவிட்டால் வாரத்தில் ஒரு நாள் சென்றாலும் நன்று. பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை, திருவாதிரை, கார்த்திகைத் தீபம், விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி, சிவராத்திரி, நவராத்திரி, ஆடிப்பூரம் போன்ற தினங்களிலும் பண்டிகைகளிலும் குடும்பத்துடன் தரிசனம் செய்ய வேண்டும்.
பூசைப் பொருட்களான வெற்றிலை, பாக்கு, கற்பூரம், பூ போன்றவற்றையோ அல்லது அபிஷேகப் பொருட்களான பால், தயிர், இளநீர் போன்றவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
🙏 வழிபடும் முறை
கோபுரத்தை(தூலலிங்கம்) கண்டவுடன் கைகளை கூப்பி வணங்கி, கால்களை கழுவி, துவார பாலகரை வணங்கி உள்ளே செல்ல வேண்டும்.
ஆண்கள் அட்டாங்க நமஸ்காரம்(தலை, மேல்வாய், தோளிரண்டு, கையிரண்டு, காலிரண்டு ஆகிய எட்டு அவயங்கள்), பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம்(தலை, கையிரண்டு, முழந்தாளிரண்டு ஆகிய ஐந்து உறுப்புக்கள்) செய்ய வேண்டும். பின்னர் விநாயகரை வழிபட்டு மூலமூர்த்தியை தரிசிக்க வேண்டும்.
பரிவார தெய்வங்களை வழிபட்டு, இறுதியில் சண்டேஸ்வரரை வணங்கி சிவதரிசன பலனை வேண்ட வேண்டும்.
ஆலயத்தை வலம் வரும் போது 3, 5 அல்லது 7 முறைகள் சிவசிந்தனையுடன் மெதுவாகச் சுற்ற வேண்டும். விக்கிரங்களைத் தொட்டு வணங்குதல் கூடாது.
🪔 தொண்டுகள்
ஆலயத்தில் கூட்டுதல், கழுவுதல், பூமாலை கட்டுதல், மணியடித்தல், வாகனம் காவுதல், தீவர்த்தி பிடித்தல் போன்ற சரியைத் தொண்டுகள் செய்ய வேண்டும்.
திருமுறைகளைப் பாடுதல், மந்திரங்களை உச்சரித்தல் போன்ற கிரியைத் தொண்டுகளும் மிக முக்கியமானவை. இவை பாவங்களை நீக்கி புண்ணியத்தை அளிக்கும்.
🌿 ஆன்மிக பலன்
ஆலய வழிபாடும் ஆலயத்தொண்டும் மனநிறைவை அளிக்கும், அன்பை வளர்க்கும், வாழ்வை உயர்த்தும்.
👌
பதிலளிநீக்கு👌
பதிலளிநீக்கு