Nallur Kanthasamy Kovil

🛕 நல்லூர்க் கந்தசாமி ஆலயம்


ஈழத்தில் உள்ள புகழ்பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றாக நல்லூர்க் கந்தசாமி கோவில் விளங்குகிறது. ஆரியச் சக்கரவத்திகளின் வழிபாட்டிற்குரிய கோயிலாக இது திகழ்ந்துள்ளது.

கோட்டை இராச்சியத்தை ஆண்ட ஆறாம் பராக்கிரமபாகுவின் மகனாகிய செண்பகப் பெருமாள், யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றி நல்லூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த காலத்திலேயே இவ்வாலயம் கட்டப்பட்டது.

🧭 ஆலய அமைப்பு

சிங்கைப் பரராசசேகரன் தனது ஆட்சிக்காலத்தில் நல்லூர்க் கந்தசாமி ஆலயத்தை மையமாகக் கொண்டு நான்கு திசைகளிலும் கோயில்களை அமைத்தான்:

  • 🔹 சட்டநாதர் கோயில் – வடக்கு
  • 🔹 வெயிலுகந்த விநாயகர் கோயில் – கிழக்கு
  • 🔹 கைலாசநாதர் – தெற்கு
  • 🔹 வீரமாகாளி – மேற்கு

💧 யமுனா ஏரி

ஆலயத்திற்கு அருகில் ஒரு அழகிய ஏரி அமைக்கப்பட்டது. யமுனா தீர்த்தத்தை கொண்டு வந்து அதில் கலந்து அதற்கு "யமுனா ஏரி" என்று பெயரிடப்பட்டது. பின்னர் அது "யமுனாரி" என அழைக்கப்பட்டது.

📜 வரலாற்று நிகழ்வுகள்

பதினாறாம் நூற்றாண்டில் இவ்வாலயம் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது. பின்னர் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் இரகுநாதமாப்பாண முதலியார் நிலத்தை வாங்கி புதிய ஆலயத்தை கட்டினார்.

பழைய மூலவிக்கிரகத்திற்குப் பதிலாக வேல் ஒன்றை மூலமூர்த்தியாகக் கொண்டு ஆலயம் நிறுவப்பட்டது.

🌿 சிறப்புகள்

  • 🙏 நித்திய மற்றும் நைமித்திய பூசைகள் காலந்தவறாது நடைபெறுகின்றன
  • 💧 தெற்கில் தீர்த்தக்கேணி அமைந்துள்ளது
  • 📖 புலவர்கள் பலர் இவ்வாலயத்தைப் புகழ்ந்து பாடியுள்ளனர்
  • 🎉 ஆவணி அமாவாசையைத் தீர்த்தமாகக் கொண்டு 25 நாட்கள் மகோற்சவம் நடைபெறும்

📸 ஆலய தோற்றம்

Nallur Kanthasamy Kovil
Nallur Kanthasamy Kovil

2 கருத்துகள்:

உங்கள் குறிப்புக்கள்