கடவுள்

கடவுள்

கடவுள்

கடவுள் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். இறைவன், ஆண்டவன், பசுபதி, பரம்பொருள் என்பன அவற்றுள் சிலவாகும். இறைவனுக்கு நிலைகள் இரண்டு உண்டு.

  • சொரூபலக்கணம்
  • தடத்தலக்கணம்

சொரூபலக்கணம்

இது இறைவனுக்கு உரிய சிறப்பியல்பாகும். இறைவன் இந்நிலையிலிருக்கும் போது அவருக்கு பெயர், குணம், குறி எதுவுமில்லை. இது திரிகரணங்களுக்கும் (மனம், வாக்கு, காயம்) எட்டாத நிலை. இந்த நிலையில் உள்ள இறைவனை நாம் பரமசிவம் என்று குறிப்பிடுகிறோம். இது கடவுளின் ஆனந்தமயமான நிலையாகும்.

தடத்தலக்கணம்

இது இறைவனுக்கு உரிய பொது இயல்பாகும். சொரூபநிலையிலிருக்கும் இறைவன் ஆன்மாக்களுக்கு அருள்புரியும் நோக்கில், தானாகவே பல படிகள் இறங்கி வரும் நிலையே தடத்தலக்கணம் ஆகும். இந்நிலையில் இறைவனுக்கு குணம், குறிகள் உண்டு. அருவம், உருவம், அருவுருவம் என்னும் முத்திருமேனிகள் மூலம் உயிர்களுக்கு அருள் புரிகின்றார். இந்நிலையில் இறைவனுக்கு எண்குணங்கள் காணப்படும்.

  • தன்வயத்தினராதல்
  • தூயவுடப்பினனாதல்
  • இயற்கையுணர்வினனாதல்
  • இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்குதல்
  • பேரருளுடைமை
  • வரம்பிலின்பமுடைமை
  • வரம்பிலாற்றலுடைமை
  • முற்றுமுணர்தல்

தடத்த நிலையில் கடவுள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களை ஆன்மாக்கள் முத்தியின்பம் பெறும் பொருட்டு ஆற்றுகிறார். இதனால் அவருக்கு ஐவகைத் திருமேனிகள் உண்டு.

  • படைத்தல் - பிரம்மா
  • காத்தல் - விஷ்ணு
  • அழித்தல் - உருத்திரன்
  • மறைத்தல் - மகேசுவரன்
  • அருளால் - சதாசிவன்

கடவுளுக்கும் ஆன்மாவுக்கும்(உயிர்கள்) இடையில் பல தொடர்புகள் காணப்படுகின்றன. கடவுளைப் போலவே ஆன்மாக்களும் அநாதியானவை. பதி பேரறிவுடையது. பசு அறிவித்தால் மட்டும் அறியக்கூடியது. ஆன்மாக்கள் பாவங்களில் இருந்து நீங்கி இறை அருளைப் பெற்றே முத்தியடையும். முத்தி நிலையில் பசு இறைவனுடன் இணையும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் குறிப்புக்கள்