இவர் சமயகுரவர்கள் நால்வருள் ஒருவர். இவர் பிறந்த ஊர் திருவாதவூர் ஆகும். இவரது அறிவாற்றலைக் கண்டு கொண்ட பாண்டிய மன்னன் தனது அரச சபையிலே பிரதம மந்திரியாக நியமித்தார். அப்பதவியை வகித்தபோது மன்னன் கட்டளைப்படி குதிரைகள் வாங்க சென்றபோது திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டார். திருவாசகம், திருக்கோவையார் ஆகிய இரு பெரும் நூல்கள் இவரால் அருளப்பட்டவை. இவை எட்டாம் திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவரது திருவாசகம் சிவனையே உருக வைத்தவை ஆகையால் நாம் எம்மாத்திரம், அதனால்த்தான் "திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்" என்ற கூற்று உருவாகியது.
நாடு | பாண்டி நாடு |
ஊர் | திருவாதவூர் |
தாய் | சிவஞானவதியர் |
தந்தை | சம்புப் பாதாசிரியர் |
வேறு பெயர்கள் | திருவாதவூரர் ஆளுடைய அடிகள் மணிவாசகர் கோவை வேந்தர் |
முதலில் பாடிய பதிகம் | நமச்சிவாய வாழ்க ... |
கடைசியில் பாடிய பதிகம் | தானெனை முன்... |
திருமுறை வகுப்பு | 8 |
முத்திபெற்ற தலம் | தில்லைச் சிதம்பரம் |
முத்தியடைந்த வயது | 32 |
முத்தியடைந்த தினம் | ஆனி மகம் |
வாழ்ந்த காலம் | கி.பி. 8ம் நூற்றாண்டு |
அவர் செய்த அற்புதங்கள்
- சிவனே நரியைக் குதிரையாக்கிக் கொண்டு வரும்படியும் மண் சுமந்து அடிபடும் படியும் செய்தது.
- புத்தர்களைத் தருக்கத்திலே வென்று ஊமைகளாக்கி பின் ஊமை தீர்த்துச் சைவர்களாக்கியது.
- ஊமையாய் இருந்த பெண்ணை பேச வைத்து, புத்தர்கள் வினாவிய வினாக்களுக்கு விடை சொல்ல வைத்தது.
- தம்முடைய திருவாசகத்தையும், திருக்கோவையையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து பெற்றுக்கொண்டது.
- எல்லோரும் காணக் கனகசபையினுள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் குறிப்புக்கள்