மாணிக்கவாசகர் வரலாறும் அற்புதங்களும் சுருக்கம்

மாணிக்கவாசகர் வரலாறு சுருக்கம் - சைவநெறி

மாணிக்கவாசகர் வரலாறு சுருக்கம்

இவர் சமயகுரவர்கள் நால்வருள் ஒருவர். இவர் பிறந்த ஊர் திருவாதவூர் ஆகும். இவரது அறிவாற்றலைக் கண்டு கொண்ட பாண்டிய மன்னன் தனது அரச சபையிலே பிரதம மந்திரியாக நியமித்தார். அப்பதவியை வகித்தபோது மன்னன் கட்டளைப்படி குதிரைகள் வாங்க சென்றபோது திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டார். திருவாசகம், திருக்கோவையார் ஆகிய இரு பெரும் நூல்கள் இவரால் அருளப்பட்டவை. இவை எட்டாம் திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவரது திருவாசகம் சிவனையே உருக வைத்தவை ஆகையால் நாம் எம்மாத்திரம், அதனால்த்தான் "திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்" என்ற கூற்று உருவாகியது.

நாடுபாண்டி நாடு
ஊர்திருவாதவூர்
தாய்சிவஞானவதியர்
தந்தைசம்புப் பாதாசிரியர்
வேறு பெயர்கள்திருவாதவூரர்
ஆளுடைய அடிகள்
மணிவாசகர்
கோவை வேந்தர்
முதலில் பாடிய பதிகம்நமச்சிவாய வாழ்க ...
கடைசியில் பாடிய பதிகம்தானெனை முன்...
திருமுறை வகுப்பு8
முத்திபெற்ற தலம்தில்லைச் சிதம்பரம்
முத்தியடைந்த வயது32
முத்தியடைந்த தினம்ஆனி மகம்
வாழ்ந்த காலம்கி.பி. 8ம் நூற்றாண்டு


அவர் செய்த அற்புதங்கள்
  • சிவனே நரியைக் குதிரையாக்கிக் கொண்டு வரும்படியும் மண் சுமந்து அடிபடும் படியும் செய்தது.
  • புத்தர்களைத் தருக்கத்திலே வென்று ஊமைகளாக்கி பின் ஊமை தீர்த்துச் சைவர்களாக்கியது.
  • ஊமையாய் இருந்த பெண்ணை பேச வைத்து, புத்தர்கள் வினாவிய வினாக்களுக்கு விடை சொல்ல வைத்தது.
  • தம்முடைய திருவாசகத்தையும், திருக்கோவையையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து பெற்றுக்கொண்டது.
  • எல்லோரும் காணக் கனகசபையினுள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் குறிப்புக்கள்