| நாடு | திருமுனைப்பாடி |
| ஊர் | திருவாமூர் |
| தாய் | மாதினியார் |
| தந்தை | புகழனார் |
| தமக்கையார் | திலகவதியார் |
| வேறு பெயர்கள் | மருணீக்கியார் வாகீசர் தாண்டகவேந்தர் அப்பர் உழவாரப் படையாளி ஆளுடைய அரசர் தருமசேனர் (சமணர்கள் இட்ட பெயர்) |
| முதலில் பாடிய பதிகம் | கூற்றாயினவாறு விலக்ககலீர் ... |
| கடைசியில் பாடிய பதிகம் | எண்ணுகேன்... |
| திருமுறை வகுப்பு | 4, 5, 6 |
| முத்திபெற்ற தலம் | திருப்புகலூர் |
| முத்தியடைந்த வயது | 81 |
| முத்தியடைந்த தினம் | சித்திரைச் சதயம் |
| வாழ்ந்த காலம் | கி.பி. 7ம் நூற்றாண்டு |
அவர் செய்த அற்புதங்கள்
- சமணர்களாலே 7 நாட்கள் சுண்ணாம்பு அறையிலே பூட்டப்பட்டிருந்தும் வேகாது பிழைத்தது.
- சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும் சாகாது பிழைத்தது.
- சமணர்கள் விடுத்த யானை இவரைக் கொல்லாமல் வலஞ் செய்து வணங்கியது.
- சமணர்கள் கல்லிலே கட்டி சமுத்திரத்திலிடக் கல் தோணியாக மிதந்தது.
- சிவபெருமானிடம் படிக்காசு பெற்றது.
- வேதாரணியத்திலே வேதங்களாலே பூட்டப்பட்ட திருக்கதவு திறக்கப் பாடியது.
- நஞ்சினால் இறந்த அப்பூதியடிகளின் பிள்ளையை உயிர்ப்பித்தது.
- கயிலையில் ஒரு வாவியில் முழுகித் திருவையாற்றிலே உள்ள குளத்தில் கரையேறியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் குறிப்புக்கள்