திருநாவுக்கரசர் வரலாறும் அற்புதங்களும் சுருக்கம்

திருநாவுக்கரசர் வரலாறு சுருக்கம் - சைவநெறி
நாடுதிருமுனைப்பாடி
ஊர்திருவாமூர்
தாய்மாதினியார்
தந்தைபுகழனார்
தமக்கையார்திலகவதியார்
வேறு பெயர்கள் மருணீக்கியார்
வாகீசர்
தாண்டகவேந்தர்
அப்பர்
உழவாரப் படையாளி
ஆளுடைய அரசர்
தருமசேனர் (சமணர்கள் இட்ட பெயர்)
முதலில் பாடிய பதிகம்கூற்றாயினவாறு விலக்ககலீர் ...
கடைசியில் பாடிய பதிகம்எண்ணுகேன்...
திருமுறை வகுப்பு4, 5, 6
முத்திபெற்ற தலம்திருப்புகலூர்
முத்தியடைந்த வயது81
முத்தியடைந்த தினம்சித்திரைச் சதயம்
வாழ்ந்த காலம்கி.பி. 7ம் நூற்றாண்டு
அவர் செய்த அற்புதங்கள்
  • சமணர்களாலே 7 நாட்கள் சுண்ணாம்பு அறையிலே பூட்டப்பட்டிருந்தும் வேகாது பிழைத்தது.
  • சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும் சாகாது பிழைத்தது.
  • சமணர்கள் விடுத்த யானை இவரைக் கொல்லாமல் வலஞ் செய்து வணங்கியது.
  • சமணர்கள் கல்லிலே கட்டி சமுத்திரத்திலிடக் கல் தோணியாக மிதந்தது.
  • சிவபெருமானிடம் படிக்காசு பெற்றது.
  • வேதாரணியத்திலே வேதங்களாலே பூட்டப்பட்ட திருக்கதவு திறக்கப் பாடியது.
  • நஞ்சினால் இறந்த அப்பூதியடிகளின் பிள்ளையை உயிர்ப்பித்தது.
  • கயிலையில் ஒரு வாவியில் முழுகித் திருவையாற்றிலே உள்ள குளத்தில் கரையேறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் குறிப்புக்கள்