திருமுறைப் பாடல்கள்


திருமுறைப் பாடல்கள்

திருச்சிற்றம்பலம்

அன்புறும் சிந்தையர் ஆகி அடியவர்
நன்புறும் நல்லூர் பெருமணம் மேவிநின்று
இன்புறும் எந்தை இணையடி ஏற்றுவார் 
துன்புறுவார் அல்லர் தொண்டு செய்வாரே  
                            
வேண்டத் தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுவதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கரியோய் நீ
வேண்டி என்னை பணிகொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய் 
யானும் அதுவே வேண்டி அல்லாய் 
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உன் தன் விருப்பு அன்றே!

அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட 
அங்கனே பெரிய நீ சிறிய 
என்னை ஆள் விரும்பி என்மனம் புகுந்த 
எளிமையை என்றும் நான் மறக்கேன் 
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா 
முக்காணா நாற்பெருந் தடந்தோல்
கன்னலே தேனே அமுதமே 
கங்கை கொண்ட சோளேச் சரத்தானே 

ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் 
அணியுடை ஆதிரை நாள் 
நாரா யனனோடு நான் முகன் அங்கி 
இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் 
திசையனைத்தும் நிறைந்து 
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் 
பல்லாண்டு கூறுதுமே 

வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

திருச்சிற்றம்பலம்


பாடல்கள் வீடியோ /ஆடியோ வடிவில் பெற இங்கே கிள்சிக் செய்க.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் குறிப்புக்கள்